உலகம்

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.! ஹமாஸின் தளபதி உயிரிழப்பு.!

Published by
செந்தில்குமார்

தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் இன்றுவரை ஹமாஸ் அமைப்பினரின் உறைவிடமாக இருக்கக்கூடிய காசா நகர் மீது தொடர்ந்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா நேரடி ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே போல, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹமாஸின் வடக்கு பகுதியின் தளபதி ஹசன்-அல்-அப்துல்லா உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐடிஎஃப் வெளியிட்டுள்ள பதிவில், “ஐடிஎஃப் போர் விமானங்கள் ஐடிஎஃப் மற்றும் ஐஎஸ்ஏ உளவுத்துறையின் அடிப்படையில் துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தி ஹமாஸின் வடக்கு கான் யூனிஸ் ராக்கெட் வரிசையின் தளபதி ஹசன் அல்-அப்துல்லாவை கொன்றது.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், 20வது நாளாக நடக்கும் இந்த போரில் தற்போது வரை 7,028 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் 2,913 குழந்தைகள், 1,709 பெண்கள் மற்றும் 397 முதியவர்கள் அடங்குவர்.

இதற்கிடையில், கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இதுவரை ரூ.37.350 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு ஒரு நாளைக்கு சுமார் $246 மில்லியன் டாலர் போருக்கான நேரடிச் செலவு என்றும் இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

7 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

11 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

12 hours ago