Categories: உலகம்

மீண்டும் தொடங்கிய போர்… காசாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதே போல பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின.

இரு தரப்பு போர் காரணமாக பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள் , பெண்கள், குழந்தைகள் அதிகள் பாதிக்கப்படுகின்றனர். அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன ந கூறி போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தியது. இறுதியில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாட்டின் மத்தியஸ்தலத்தை அடுத்து முதலில் 4 நாள் போர் நிறுத்தம் பின்னர் கூடுதல் 2 நாள் நேற்று ஒருநாள் என மொத்தமாக 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த போர் நிறுத்தத்தின் முக்கிய நோக்கமே, இரு தரப்பில் இருந்தும் போர் பிணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான். அதன்படி நேற்றுவரை பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். நேற்று 8 இஸ்ரேல் பிணை கைதிகளும் , 19 பாலஸ்தீன பிணை கைதிகளும் இரு தரப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதுவரை 110 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும், 240 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவமும் ரிலீஸ் செய்துள்ளது.

ஒரு நாளைக்கு 10 பிணை கைதிகளை விடுவிப்பதாக தான் ஒப்பந்தம் ஆனால் ஹமாஸ் தரப்பு அதனை மீறி  8 பேரை மட்டுமே விடுவித்ததக குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. பதிலுக்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது. வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதாக தகவல்கள் வெளியுள்ளன.

பணயக்கைதிகள் பரிமாற்றத்த்திற்கான போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

14 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

14 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

14 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

14 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

15 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

15 hours ago