Categories: உலகம்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய வம்சாவளியினர்…

Published by
மணிகண்டன்

UK தேர்தல்:  பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று நிறைவடைந்து. இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் தனி பெரும்பான்மையுடன் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு முழு பேறுபெற்றுள்ளார் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்.

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும், விரைவில் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள கீர் ஸ்டார்மருக்கும் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2019 தேர்தலின் போது இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் எம்பிகளாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அதே போல இந்த முறையும் 107 இந்திய வம்சாவளியினர் பல்வேறு கட்சிகள் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். தற்போது அதன் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்இதோ…

ரிஷி சுனக் : ஆட்சியை இழந்தாலும் வடக்கு யார்க்ஷயர் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக எம்பியாக வெற்றி பெற்றுள்ளார்.

ஷிவானி ராஜா : தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், லீசெஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கனிஷ்கா நாராயண் : தொழிலாளர் கட்சி சார்பாக வேல்ஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள்ளார். அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ள முதல் சிறுபான்மை பின்னனி கொண்ட வேட்பாளர் கனிஷ்கா நாராயண்.

சுயெல்லா : கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக பிரேவர்மேன் ஃபேர்ஹாம் மற்றும் வாட்டர்லூவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளர்.

ககன் மொகிந்திரா : கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தென் மேற்கு ஹெர்ட்ஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

நவேந்து மிஸ்ரா : தொழிலாளர் கட்சி சார்பாக ஸ்டாக்போர்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர்தான் கடந்த 2019 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

சத்வீர் கவுர் : தொழிலாளர் கட்சி சார்பாக சவுத்தாம்ப்டன் டெஸ்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

உமா குமரன் : லண்டன் ஸ்டார்ட்ஃபோர்ட் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஆவார்.

இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இந்திய வம்சாவளியினரின் வெற்றி எண்ணிக்கை கடந்த முறையை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

1 hour ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

2 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

3 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

4 hours ago