Categories: உலகம்

2021ல் ஐரோப்பாவில் 2,50,000 இறப்புகள்.. காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது.

நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, நுண்ணிய துகள் மாசுபாடு (PM2.5) கடந்த 2021ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்ட மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்து – 11 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

நுண்ணிய துகள்கள் அல்லது PM2.5 மாசுபாடு, மனிதர்களின் சுவாசக் குழாயில் ரொம்ப ஆழமாக செல்ல கூடியது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் அபாயத்தை மோசமாக்குகிறது. நுண்ணிய துகள்களின் செறிவுகள் தொடர்நத WHO பரிந்துரைகளை பின்பற்றி இருந்தால், இறப்புகளை தவிர்த்திருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுண்ணிய துகள் காற்று மாசுபாட்டின் காரணமாக இறந்தவர்களின் அதிகரித்துள்ளது. இதில், முக்கியமாக கொரோனா தொற்றுநோய் சமயத்தில் இந்த காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக இறப்புகளின் விகிதம் அதிகரித்துள்ளது என்றுள்ளனர். இருப்பினும், 2005 முதல் 2021 வரை, நுண்ணிய துகள் மாசுபாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 41 புள்ளிகள் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

நிறுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சத்தம்.. பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ் – இஸ்ரேல்.!

ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஆண்டுகளில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நமது ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக இறப்புகள் மற்றும் நோய்கள் காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடும் என்று EEA நிர்வாக இயக்குனர் லீனா யலாமோனோனென் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதே போல், நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) காற்றில் வெளிப்படுவதால் ஏற்படும் அகால மரணங்களும் 2020ல் இருந்து சிறிது அதிகரித்து, 2021ல் 52,000ஐ எட்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே, காற்று மாசுபாடு ஐரோப்பியர்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளது என ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

10 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

31 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

35 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

50 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

1 hour ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago