பாரிஸ் ரயில் நிலையத்தில் ஒரு நபர் கடும் தாக்குதல்.. பலர் காயம்.! துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை.! 

Default Image

பாரிஸ் ரயில்நிலையத்தில் ஒரு நபர் கத்தியால் பயணிகளை தாக்கியதில் பலர் காயமடைந்தனர். 

பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் உள்ள கார் டு நார்ட் (Gare du Nord) எனும் ரயில் நிலையத்தில் இன்று ஒரு மர்ம நபர் உட்புகுந்து தான் வைத்திருந்த கூறிய ஆயுதத்தால் (கத்தி) அங்குள்ள பயணிகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர். விஷயம் அறிந்து விரைந்த போலீசார், அந்த நபரின் தாக்குதலை கட்டுப்படுத்த துப்பாக்கியால் அந்த நபரை சுட்டு பிடித்துள்ளனர்.

அந்த நபர் பற்றிய விவரம், அவர் எதற்காக தாக்கினார் என விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், அவர் மீது எந்தவித தீவிரவாத தொடர்பும் இல்லை என்பது மட்டும் தற்போது போலீசார் தரப்பில் தெளிவாகியுள்ளது.

லண்டன் மற்றும் வடக்கு ஐரோப்பாவிற்கான ரயில்களுக்கான மையமாக செயல்படும் பிரதான ரயில்நிலையத்தில் நடந்த தாக்குதல் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்