ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 22 பேர் பலி.!

Default Image

ரஷ்யாவில் பதிவு பெறாமல் இயங்கிவந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் பதிவு பெறாமல், சட்ட விரோதமாக இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த தீ விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முதியோர் இல்லமானது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத இரண்டு மாடி மரக் கட்டிடத்தைக் கொண்டது, இதன் மேல் தளம் முதலில்  தீப்பிடித்து எரிந்தது எனவும் வெப்பமூட்டும் கொதிகலன்(பாய்லர்) பழுதடைந்து அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்களில் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்