7 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு கிரீன் கார்டு வழங்குவதாக அமெரிக்காவின் புதிய மசோதா அறிவித்தது.
கிரீன் கார்டு வழங்குவதற்கான புதிய மசோதாவானது குடியேற்றச் சட்டத்தின் புதுப்பிக்கும் குடியேற்ற விதிகள் செனட்டில் செனட்டர்களான அலெக்ஸ் பாடில்லா,எலிசபெத் வாரன், பென் ரே லுஜன் மற்றும் விப் டிக் டர்பின் ஆகியோரால் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாவின் கீழ்,H-1B மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் புலம்பெயர்ந்தோர் குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் தொடர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்திருந்தால், சட்டப்பூர்வமான நிரந்தரக் குடியுரிமைக்கு(கிரீன் கார்டு) தகுதி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்மட்ட ஜனநாயகக் கட்சியின் அலெக்ஸ் பாடில்லா கூறுகையில், ஹெச்-1பி மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் உட்பட 8 மில்லியன் மக்களுக்கு கிரீன் கார்டு வழங்கி, அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
“எங்கள் காலாவதியான குடியேற்ற அமைப்பு எண்ணற்ற மக்களைப் பாதிக்கிறது மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தைத் தடுத்து நிறுத்துகிறது.இந்த மசோதா 35 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக பதிவேடு கட்ஆஃப் தேதியை புதுப்பிக்கும், இதனால் அதிகமான குடியேறியவர்கள் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க முடியும்,” என்று மேலும் கூறினார்.
நிரந்தர குடியுரிமை அட்டை என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் ஒரு கிரீன் கார்டு என்பது அமெரிக்காவிற்கு குடியேறியவர்களுக்கு வழங்கப்படும் ஆவணம், இதன் மூலம் நிரந்தரமாக வசிப்பதற்கான சலுகையைப் பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாகும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…