hospital attacked Russian [file image]
ரஷ்யா தாக்குதல் : உக்ரைன் தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 800 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சொல்லப்போனால், கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் பட்டப்பகலில் உக்ரைன் தலைவர் நகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்ளிட்ட 5 நகரங்களின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கீவ் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது, நடந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததுடன் 171பேர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடந்ததற்கு பிறகு, பயந்துபோன நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள தப்பிச் சென்றனர். மேலும் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்ணை கலங்க வைக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமூக வலைத்தளங்களில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். “தலைநகர் கீவ், டினிப்ரோ, கிரிவி ரிஹ், உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மருத்துவமனை, அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…