Categories: உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி…9 பேர் மாயம்!

Published by
கெளதம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 3 வாரங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் தற்போது வரை இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 26 பாலஸ்தீனியர்கள், 4 இஸ்ரேலியர்கள் மற்றும் 1 லெபனான் ஊடகவியலாளர்கள் உள்ளனர் என்பதை பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த 31 பத்திரிகையாளர்களில், 26 பேர் காஸாவில் கொல்லப்பட்டனர், அதேசமயம், அவர்களில் நான்கு பேர் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் போது கொல்லப்பட்டனர் என்றும், லெபனானில் ஒரு பத்திரிகையாளர் ஹெஸ்பொல்லா அமைப்பை குறிவைத்த இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மக்களை பாதுகாக்க தவறிய நெதன்யாகு! ஹமாஸ் பிடியில் ஊள்ள 3 பெண் ப

மேலும்,  8 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், 9 பேர் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஹமாஸின் இராணுவத் திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம்.! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

கள நிலவரத்தை ஆராய இஸ்ரேலுக்குள் இதுவரை அதிக எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் நுழைந்துள்ளனர். அமெரிக்கா (358), இங்கிலாந்து (281), பிரான்ஸ் (221), ஜெர்மனி (102) ஆகிய நாடுகளில் இருந்து சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், அவர்களுக்கு தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…

45 minutes ago

வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…

46 minutes ago

இலங்கை கடற்படை சிறைபிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…

1 hour ago

LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!

சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…

2 hours ago

இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…

2 hours ago

INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…

3 hours ago