சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹேஸ் நகரில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நேற்று இரவு அங்குள்ள பாழுங்கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.இதனை பார்த்த பெற்றோர் அச்சத்தில் சத்தம்போட்டுள்ளனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.பின்னர் சிறுவன் விழுந்த கிணறு 4 மீட்டர் ஆழத்தில் குறுகலாக இருந்ததால் அக்கம்பக்கத்தினரால் சிறுவனை மீட்க முடியவில்லை.
பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அரை மயக்கத்துடன் இருந்த சிறுவனுக்கு உடனடியாக ஆக்சிஜன் சப்ளை அளித்துள்ளனர்.
பின்னர் சிறுவனின் கையை கட்டி மேலே இழுக்க முயற்சி செய்துள்ளனர் .ஆனால் கிணற்றின் உள்பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால் சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சிறுவன் இருந்த கிணற்றுக்கு அருகில் புதிதாக குழி ஒன்றை தோண்டி அங்கிருந்து சுரங்கப்பாதை அமைத்து பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…