அமெரிக்கா : ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்டைஸில் உள்ள மளிகைக் கடைக்கு வெளியே வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் எனவும் தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் உள்ள அவர்களின் நிலைமைகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று செய்தியாளர் சந்தித்த போலீசார் தகவலை தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ஆர்கன்சாஸ், நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மூன்று கொலை வழக்குகளில் மாநில போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு மளிகைக் கடைக்குள் நடந்ததா அல்லது வெளியில் நடந்ததா என்பதை போலீஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. போஸியின் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் உள்ள நோக்கத்தையும் பற்றி திவீரமாகி விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ஆர்கன்சாஸ் மாநில காவல்துறை இயக்குனர் மைக் ஹாகர் கூறுகையில் “துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்து மூன்று பேர் இறந்துவிட்டனர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். துப்பாக்கிச் சூடு சண்டையில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர். சந்தேக நபரும் சுடப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…
சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…