கத்தாரில் குழந்தையை கடித்ததாக 29 நாய்கள் சுட்டு கொலை

Default Image

கத்தாரில் ஒருவரின் குழந்தையை கடித்ததாக 29 நாய்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் ஒரு பாதுகாப்புப் பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நுழைந்து 29 நாய்களை சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தை விலங்கு மீட்புக் குழு PAWS Rescue Qatar தனது  பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்குள்ள  நாய்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். அதில் 29 நாய்கள் உயிரிழந்துள்ளது என்று தோஹா நியூஸ் ரிபோர்ட் தெரிவித்துள்ளது.நாய்களில் ஒன்று தங்கள் மகன்களை கடித்ததால் துப்பாக்கிசூடு நடத்தியவர்கள்  கூறினர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பல நாய்கள் காயமடைந்துள்ளது  எனவும், கமடைந்த நாய்கள் கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கடும் கோபத்தை தூண்டியுள்ளது.விலங்கு பிரியர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்