Nobel Price 2023 - Physics [File Image]
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல் , வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகளை நோபல் கமிட்டி வழங்கும். 2023ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு mRNAவை கண்டறிந்த 2 மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை நோபல் கமிட்டி அறிவித்தது .
இதனை தொடர்ந்து இன்று இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளை கண்டறிந்ததற்காக 3 இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, நாளை (அக்டோபர் 4) வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் (அக்டோபர் 5) இலக்கியத்திற்கான நோபல் பரிசும், வரும் அக்டோபர் 6ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. வரும் அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதர பிரிவில் நோபல் பரிசு பெறுவோரின் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…