Categories: உலகம்

Pakistan Horror:பாகிஸ்தானின் முல்தான் மருத்துவமனையின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட 200 அழுகிய உடல்கள்

Published by
Dinasuvadu Web

பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் மொட்டை மாடியில்  குறைந்தது 200 அழுகிய சடலங்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் மேல்தளத்தில் கட்டப்பட்ட அறையில் டஜன் கணக்கான உடல்கள் அழுகி நிலையிலும், மறுபுறம், சமூக ஊடகங்களில் பரவும் செய்தியின்படி,மேற்கூரையிலிருந்து இருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் சவுத்ரி ஜமான் குஜ்ஜரின் ஆலோசகர்,மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​மருத்துவமனை சவக்கிடங்கின் மேற்கூரையில் பல அழுகிய உடல்கள் இருப்பதை வெளிக்கொண்டுவந்தார்.

வெளிவந்த 200 உடல்கள்:

இதுகுறித்து அவர் கூறுகையில்,”நான் நிஷ்தார் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு மனிதர் என்னை அணுகி, நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்ய விரும்பினால், பிணவறைக்குச் சென்று பாருங்கள்,” என்று கூறினார்.

அவர் அங்கு சென்றபோது பிணவறையின் கதவுகளைத் திறக்க ஊழியர்கள் தயாராக இல்லை என்றார். “இதற்கு, நீங்கள் இப்போது திறக்கவில்லை என்றால், நான் உங்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப் போகிறேன்” என்று கூறிய பின்னர் தான் கதவை திறந்தனர் அதன் பின்பு தான் அங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன்பின்னர் கைவிடப்பட்ட உடல்களை தகனம் செய்ய உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு மூன்று நாட்களில் ஒரு குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ மாணவர் பேட்டி:

இதற்கிடையில், நிஷ்தர் மருத்துவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டான் செய்தித்தாளிற்கு அளித்த பேட்டியில் , மாணவர்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

உடல்கள் ஏற்கனவே பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டதாகவும், மேலும் மருத்துவ பயன்பாட்டிற்காக எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை பிரித்தெடுக்க கூரையில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

23 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

48 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago