Categories: உலகம்

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவில் இருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்.!

Published by
மணிகண்டன்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரையில் 2000 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 1200 பேர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 900 க்கும் அதிகமானோர் பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம்.. சமநீதி கிடைக்க வேண்டும்.! அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை.! 

தற்போது, இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருப்பதாக கருதப்படும் காஸா நகரில் தற்போது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 18 மணி நேரமாக காஸா நகர் மீது தொடர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

ஐந்து நகரங்களைக் கொண்ட காஸாவின் முக்கிய பகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கு ஹமாஸ் அமைப்பினர் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பெயரில் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள்ளது.

காஸாவில் 5 நகரங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 20 லட்சம் பேர் இருக்கின்றனர். தற்போது தாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால், தாக்குதல் நடைபெறும் இடங்களில் உள்ள பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.  அவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஸா எல்லை பகுதியில், எகிப்து எல்லையிலோ அல்லது இஸ்ரேல் முகாம்களிலோ அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை ஐநாவின் மனித உரிமை ஆணையம் மற்றும் உலக சுகாதார அமைப்புகள் செய்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

32 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

35 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago