Categories: உலகம்

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 195 பேர் பலி – ஹமாஸ் தகவல்!

Published by
கெளதம்

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தகவல் தெரிவித்துள்னர்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது. இந்தப் போர் 27 நாட்களுக்குப் பிறகும் தொடர்கிறது. இப்போது வரை 1400 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்களில் காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில், 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் 777 பேர் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் ஹமாஸின் இராணுவத்தையும் ஆளும் திறனையும் அழிக்கும் குறிக்கோளுடன் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். தற்போது காசா பகுதிக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தரைவழி ஊடுருவலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஹமாஸுக்கு எதிராக இந்திய மக்கள் நிற்க வேண்டும்- ஹமாஸ் தலைவரின் மகன்

ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக வைத்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

14 minutes ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

34 minutes ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

55 minutes ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

2 hours ago

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

2 hours ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

2 hours ago