1,665 கோடி ரூபாயாம்.. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு செலவுகள்..!

Queen Elizabeth

இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் இறுதி சடங்கிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1,665 கோடி செலவாகியுள்ளது. 

இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கானது 10 நாட்கள் நடைபெற்றது . அவரது இறுதி சடங்கிற்கும் உலக நாடுகளை தலைவர்கள் பெரும்பாலானோர் வந்திருந்தனர்.  இதனால்லண்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன.

ராணி எலிசபெத்தின் நல்லடக்கம் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த 10 நாள் இறுதி சடங்கு செலவை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான செலவு மொத்தமாக இந்திய ரூபாய் மதிப்பில் 1,665 கோடி என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து அவரது மகன் 3ஆம் சார்லஸ் அண்மையில் இங்கிலாந்து மன்னராக பதவி ஏற்றுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்