Categories: உலகம்

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 15 பேர் பலி… பலர் காயம்

Published by
Ramesh

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் அந்நாட்டில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீவிபத்து இதுவாகும். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தினம் சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதே நேரம், பலரும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் 15 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More – அமெரிக்கா முதல் தாய்லாந்து வரை… இந்த நாடுகளில் கஞ்சா குற்றமில்லை… லிஸ்ட் இதோ…

சம்பவத்தை தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனிடையில் நகர மேயர் சென் ஜிசாங், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

Published by
Ramesh

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago