சயனைடு பயன்படுத்தி தனது நண்பர்கள் 12 பேரை கொன்றதாக 32 வயது பெண்ணை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் பாங்காக் எனும் நகரில் வசித்து வந்தவர் சிரிபான் கான்வாங். கடந்த 14ம் தேதி சிரிபான் கான்வாங் சுற்றுலாவுக்காக தன் தோழி சாராரத் என்பவருடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த ஆற்றங்கரைக்கு இருவரும் சென்ற நிலையில், திடீரென சிரிபான் கான்வாங் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பிறகு அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவை காணாமல் போன தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றால் காவல்துறையினர் சிரிபான் கான்வாங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகவும், அவருடைய உடலில் சயனைடு விஷம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், சிரிபான் கான்வாங் தோழி சாராரத் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடந்தினார்கள். விசாரணையில் ” 12 பேரை சயனைடு கொடுத்து அவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைகளை அவர் கடந்த 3 ஆண்டுகளாக செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சாராரத் கொலை செய்த அனைவரும் சுமார் 33 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்கள் எனவும், இவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடுவதற்காக இந்த கொலைகளை அவர் செய்துள்ளதாக விசாரணை நடத்திய காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…