Missile Attack : இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இரு தரப்பும் தங்களது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் முயற்சி எடுத்தும், போரின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறதே தவிர, நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தொடர் தாக்குதலால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது. இந்த சூழலில், இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இருக்கும் விவசாய தோட்டத்தை தாக்கியுள்ளது.
இதில், இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் Ziv மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த மூன்று பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், விவசாயத் தொழிலாளர்கள் மீது ஷியா பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புல்லா நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது மற்றும் இருவர் காயமடைந்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இஸ்ரேலிய மருத்துவ நிறுவனங்கள் மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையை செய்து வருவதாகவும், உயிரிழத்தவர் குடும்பத்து இரங்கல் தெரிவித்தார் இஸ்ரேல், அனைவரையும் சமமாக பார்ப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளது.
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…
சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…