யாழ்ப்பாணம் நகரில் பெட்ரோல் குண்டு வீச்சு…!!
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நேற்று நள்ளிரவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை அங்கே இருந்த வீடு ஒன்றின் மீது வீசி விட்டு சென்றது. இதனால் அந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து நாசமாகின. வீட்டின் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
dinasuvadu.com