பதவி அதிகாரத்துடன் அமெரிக்காவில் போலீசாரை மிரட்டிய துறைமுக அதிகாரி ராஜினாமா!

Default Image

துறைமுக அதிகாரி ஒருவர் அமெரிக்காவில் பதவி அதிகாரத்துடன் போலீசாரை மிரட்டிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியின் துறைமுக ஆணையரான கேரன் டர்னர் (Caren turner) உடைய மகளின் கார் போக்குவரத்து விதி மீறலுக்காக நிறுத்தப்பட்டது.

அனுமதிக்கப்படாத கண்ணாடியின் அடர் நிறத்துக்காக நிறுத்தப்பட்ட காரின் பதிவு உரிமம் முடிந்ததும்  கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த டர்னர் தமது அடையாள அட்டையைக் காண்பித்து போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை சபிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து போலீசாருடைய காரின் டேஸ் போர்ட் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் முன்னாள் ஆளுநரால் பதவி பெற்ற டர்னர் ராஜினாமா செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்