சென்னையை ஆக்கிரமித்த Zero is Good விளம்பரங்கள்.! காரணம் என்ன.?

Published by
மணிகண்டன்

சென்னை : சென்னை சாலையை ஆக்கிரமித்துள்ள ‘Zero is Good’ எனும் பூஜ்ஜியம் நல்லது என்ற விளம்பர பதாகைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பதாகைகள் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவலர்களால் அமைக்கப்ட்டுள்ளது.

சென்னை மக்கள் இந்த பதாகைகள் பற்றி பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட போக்குவரத்து காவலர்கள் இந்த பதாகைகளை வைத்த நோக்கத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பொதுமக்களின் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஒரு வித்தியாசமான விளம்பரம் மூலம் மக்களை சிந்திக்க வைத்து மக்களை பதில் கூற வைத்து மக்களிடமே இந்த பதாகைகள் கவனம் ஈர்த்துள்ளன.

ஏன் Zero is Good ?

Zero is Good என்பது சாலைகளில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி சென்னையில் விபத்துகளை முற்றிலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூஜ்ஜிய விபத்துகள் நல்லது என இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முதலிடம் :

கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு சாலை மாதம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது சென்னை சேப்பாக்கம் பகுதியில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக போக்குவரதுத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், இந்தியாவில் அதிகம் விபத்து ஏற்படும் மாநிலம் தமிழகம் இருக்கிறது எனும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் நேரும் விபத்துகளில் உயிரிழந்தோர்களில் 50 சதவீதம் பேர் 19 வயது முதல் 32 வயது வரையிலானோர். ஆவர் என்றும், இந்த விபத்துகளுக்கு பிரதான காரணம் ஓட்டுனர்களின் கவனகுறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது என அமைச்சர் அந்த நிகழ்வில் குறிப்பிட்டு இருந்தார்.

அப்போதே, தமிழகத்தை விபத்துகள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதற்கான போக்குவரத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய நடவடிக்கைகள் :

கடந்த ஜூன் மாதம் சென்னை அரசு பேருந்து ஓட்டுனர்களில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளை ஏற்படுத்திய 334 ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி, சட்ட ஒழுங்கு காவல்துறையினர் சென்னை பெருநகர் முக்கிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்ட ஒழுங்கு காவல்துறையினர் போக்குவரத்துக்கு உதவியாக இருப்பதன் மூலம் விபத்துகள் மேலும் குறைந்ததாகவும் , குற்ற சம்பவங்களும் குறைந்ததாகவும் மக்கள் மத்தியில் கூறப்படும் அளவுக்கு சென்னை காவல்துறையினர் தங்கள் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago