யூடியூபர் மாரிதாஸ் டிசம்பர் 23 வரை சிறையில் அடைப்பு – நீதிமன்றம் உத்தரவு!

Published by
Edison

முப்படைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த முப்படைத்தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.அவர்களுக்கு டெல்லியில் இன்று இறுதி மரியாதை செலுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில்,முப்படைத் தளபதி மரணம் தொடர்பாக விமானப்படை மற்றும் மத்திய அரசின் கருத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதனையடுத்து,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டதையடுத்து,யூடியூபர் மாரிதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் உள்ள வீட்டில் வைத்து யூடியூபர் மாரிதாஸை கைது செய்ய சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர்.மேலும்,அவர் மீது 153 ஏ, 504, 505 (2), 505 (1)பி சட்டப்பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதற்கிடையில்,தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாரிதாஸ் தனது பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் “மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து,யூடியூபர் மாரிதாஸை உத்தமபாளையம் கிளை சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

Recent Posts

மிரட்டலான ஆட்டம்., ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

மிரட்டலான ஆட்டம்., ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…

4 hours ago

ஜஸ்ட் மிஸ்.., IPL சம்பவத்தை தவறவிட்ட ஹைதிராபாத் அணி! இனி என்ன நடக்க போகுதோ?

ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…

5 hours ago

அதே மிரட்டல் அடி சம்பவம்., ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதிராபாத்!

ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…

6 hours ago

கடலோர மக்கள் இதனை செய்யுங்கள்! ரஜினிகாந்த் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ!

சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…

7 hours ago

கொம்பன் இறங்கிட்டான்.., ராஜஸ்தானுக்கு வானவேடிக்கை காட்ட தொடங்கிய ஹைதிராபாத்!

ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…

8 hours ago

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…

9 hours ago