பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட,யூ-டியூபர் மதனிடம்,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில்,யூ-டியூபர் மதனின் 2 சொகுசு கார்கள்,3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.
இதனைத் தொடர்ந்து,மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.அப்போது,செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்தபோது,நான் என்ன பிரதமரா?”,என்று மதன் கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த போலீசார்,”நீ ஒரு குற்றவாளி”,என்று கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.
அதன்பின்னர்,அங்கு மதனிடம்,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்,மதனை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும்,பின்பு காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…