5 மாத கர்ப்பிணியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்கள்!திடுக்கிடும் தகவல்!

Default Image
  • 4 இளைஞர்கள் சேர்ந்து 5 மாத கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
  • இதன் காரணமாக காவல்துறையினர் அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரதா.இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரித்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்துவருகிறார்.தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் ஐவரும் ஜெகனும் சினிமாவை பார்ப்பதற்கு திரையரங்கத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது திருப்பாப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன், ஆகிய நான்கு இளைஞர்கள் அவரை கேலி செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அவரை அந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.இதனால் ஜெயப்பிரதா செருப்பை எடுத்து காட்டியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவரை காரில் கடத்தியுள்ளனர்.

பின்னர் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதன் காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரின் அடைப்படையில் காவல்துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

பின்னர் ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் அந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்