தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை கொண்டு சரமாரியாக குத்திய வாலிபர்.!

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தில்  புங்கலிங்கம் என்ற 31வயது போலீசாருக்கு  சரமாரியாக கத்தியை வைத்து குத்திய வாலிபர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் புங்கலிங்கம் 31 வயதான இவர் வடபாகம் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் தூத்துக்குடி பாளை ரோட்டில் எம்ஜிஆர் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற வாலிபர் ஒருவருக்கும் புங்கலிங்கம் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது .

இந்த நிலையில் அந்த வாலிபர் போலீஸ் புங்கலிங்கத்தை கத்தியால் சரமாரியாக குத்தி தோடு கொலை மிரட்டல் விடுத்து தப்பி அங்கிருந்து ஓடியுள்ளார் , இதில் படுகாயம் அடைந்த புங்கலிங்கம் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், புங்கலிங்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மேலும் இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார், விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் புரத்தை சேர்ந்த செல்வம் 44 வயதான இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் எம்ஜிஆர் பூங்காவில் காவலாளியாக இருக்கிறார், மேலும் இவரிடம் உங்களுக்கும் புங்கலிங்கதிற்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts