சென்னையில் பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன. மடிப்பாக்கத்தில் உள்ள ஜான் என்பவர் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜான் கடைக்கு ஒரு நபர் ஆட்டோவில் வந்து உள்ளார். ஆட்டோவில் அந்த நபர் உங்கள் கடையை இணையதளத்தின் மூலமாக பார்த்து பைக் வாங்க வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் ஜானுக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் தனது சகோதரர் எட்வினிடம் கடையை விட்டு விட்டு சென்று உள்ளார். அந்த நபர் 30 ஆயிரத்துக்கு பைக் வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே எட்வினிடம் அந்த நபர் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எட்வின் அவரை நம்பி பைக்கை கொடுத்துள்ளார். டெஸ்ட் டிரைவ் பைக் எடுத்து சென்று நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை இதனால் எட்வின் உடனே அவருக்கு போன் செய்தபோது அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்ற போலீஸார் அந்த நபரை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த நபர் இறங்கிய ஆட்டோ டிரைவரையும் , சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…