முன்விரோதம் காரணமாக இளைஞர் குத்திக் கொலை..!

Default Image

ராமநாதபுரம் அருகே உள்ள கள்ளரி தெரு பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருடைய மகன் அருண் பிரகாஷ். மேலும் அருண் பிரகாஷ் நண்பர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலகாரணங்களால் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலும் நேற்று பகலில் அருண் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் யோகேஸ்வரன் என்பவரும் அப்பகுதியில் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென அருண்பிரகாஷ் முதுகு பகுதியில் கத்தியால் குத்தினர், அவருடன் இருந்த அவரது நண்பர் யோகேஷ்வரனிற்கும் வயிற்றில் கத்தியை வைத்து மர்ம நபர்கள் கத்தி வைத்து குதியுள்ளனர்.

இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் அருண் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மேலும் யோகேஷ் வரன் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்ததும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் இந்த கொலை சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்