வாகனத்தை பறிமுதல் செய்ததால்… இளைஞர் தீக்குளிப்பு..!

Published by
பால முருகன்

திருப்பூர் மாவட்டத்தில் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் நடுரோட்டில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் முகிலன், இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஊரடங்கு அமலில் இருந்தத நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்துகொண்டிருந்தனர், அப்பொழுது அங்கு வந்த முகிலன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார், இதனை பார்த்த காவல் துறையினர் வண்டியை மடக்கி பிடித்து உரிய ஆவணங்கள் இல்லாததால் வண்டியை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த வண்டியை காவல்துறையினர் எதிரில் உள்ள மைதானத்தில் நிறுத்தியுள்ளனர், இதனால் கோபமடைந்த முகிலன் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கிருந்து மண்ணெண்ணெய் எடுத்துகொண்டு வேகமாக வந்து நாடு ரோட்டில் நின்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளார், இதனை பார்த்த போலீசார் மற்றும் மக்கள் வேகமாக போர்வை எடுத்து கொண்டு தீயை அணைத்துள்ளனர், மேலும் முகிலன் உடலில் 90% தீகாயம் ஏற்பட்டுள்ளது, இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட 5 காவலர்களையும் விசாரணை முடியும் வரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து உள்ளதாகவும்,  முகிலனுக்கு தேவையான அணைத்து உதவியும் செய்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளைஞர் தீக்குளிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க விசாரணை அதிகாரியாக மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி. பிரவீன் குமார் நியமிக்கப்பப்பட்டுள்ளார். மேலும் அதில் பதிவான சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் 5 காவ​லர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

37 minutes ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

1 hour ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

2 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

4 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

5 hours ago