தூத்துக்குடி அருகே…புதுமண தம்பதி வீட்டில் திருடிய வாலிபர் கைது.!

Published by
பால முருகன்

தூத்துக்குடி மாவட்டம் அருகே புதுமண தம்பதி வீட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலையன் கரிசல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் ஜெயராஜ் வயது (67) இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் , மேலும் இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார், இவரது உறவினரான துரைராஜ் மகன் ஐசக் நியூட்டன் வயது 29 இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த 15நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது, இதயைடுத்து புதுமண தம்பதியர் குலையன் கரிசலில் உள்ள கணேசன் ஜெபராஜூக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஐசக் நியூட்டன் தனது தொழில் விஷயமாக வெளிய சென்றதால் அவருடைய மனைவி அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு தூங்க சென்றார், இதை பார்த்த அந்த திருடன் இரவு ஐசக் நியூட்டன் வீட்டில் இறங்கி 2 உண்டியல் மற்றும் 5,000ரூபாய் மற்றும் வெள்ளி கொலுசு, மோதிரம் போன்ற பொருட்களை எடுத்துச்சென்றார். 

மேலும் காலை ஐசக் நியூட்டன் மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு வரும் பொழுது நகைகள் மற்றும் பணம் திருடுபோனதை அறிந்த ஐசக் நியூட்டன் அதிர்ந்து போனார், இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி மற்றும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

மேலும் தடயவியல் நிபுணரை வரழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர, மேலும் போலீசார் வழக்கு பதிந்து அந்த மர்ம நபரை தேடினர், அப்போது அந்த பகுதியிலிலுள்ள பால்பாண்டி மகன் பாலமுருகன் வயது 35 திருடியது என்று தெரியவந்துள்ளது, போலீசார் அவரை விசாரணை செய்த பொழுது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார், அதன் பிறகு திருடிய 2 உண்டியல் மற்றும் 5,000ரூபாய் மற்றும் வெள்ளி கொலுசு, மோதிரம் அனைத்தையும் மீட்டனர். 

 

Published by
பால முருகன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago