உங்கள் நீலிக்கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Default Image

முதலமைச்சர் அறிவிப்பை கண்டு மு.க.ஸ்டாலின் பதட்டப்பட வேண்டாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நேற்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதனால்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதலமைச்சர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொடுக்கின்ற குணம் வள்ளல் வாரிசுகளுக்கே வரும்! கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற முதலமைச்சர் அவர்களின் மக்கள் போற்றும் அறிவிப்பு கண்டு மு.க.ஸ்டாலின் பதட்டப்பட வேண்டாம், உங்கள் நீலிக்கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது! 2021லும் அம்மாவின் ஆட்சியே மலரும், இதுவே இனி சரித்திரம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Lucknow Super Giants won
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi