திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு, ரத்தக்கறையுடனும் கையில் கத்தியுடனும் காவல் நிலையத்திற்கு வந்த இளம் பெண்ணை பார்த்து அதிர்ச்சி போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் அருகே உள்ள ஓரக்காடு அல்லிமேடு எனும் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் 19 வயது மகள் தான் கவுதமி. இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுனராக பணியாற்றி வரக்கூடிய அஜித்குமார் ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில், கௌதமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க வெளியில் சென்ற போது, அவரை பின்தொடர்ந்த அஜித் குமார் கையில் கத்தியை வைத்து மிரட்டியதுடன் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கௌதமி, அஜித்குமார் கையில் வைத்திருந்த கத்தியை பறித்து அஜீத் குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அஜித்குமார் பலியாகியுள்ளார். அதன்பின் கத்தியுடன் கவுதமி காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த அஜித்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…