ஒரே மாதத்தில் இரண்டு காதல் திருமணம் செய்த இளைஞர் கைது!

Published by
Rebekal

கள்ளக்குறிச்சியில் ஒரே மாதத்தில் இரண்டு காதல் திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவாங்கூர் எனும் கிராமத்தில் 22 வயதுடைய பூவரசன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள நர்மதா என்னும் பெண்ணை சில மாதங்களாக காதலித்து, நெருங்கி பழகியதால் நர்மதா கர்ப்பமாகியுள்ளார். எனவே, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசனை வற்புறுத்தியுள்ளார். இதன் விளைவாக பூவரசன் தலைமறைவாகியுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையில் நர்மதா  அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதனை கண்டறிந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணமாகி சில நாட்களிலேயே பூவரசன்  செல்போனுக்கு தீபிகா எனும் கல்லூரி மாணவி ஒருவர் காதலி என கூறி அழைத்துள்ளார். அப்போது தான் பூவரசன் தன்னையும் காதலித்து, தீபிகா எனும் பெண்ணையும் காதலிக்கிறார் என்பதுதெரியவந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நர்மதா பூவரசனிடம் விசாரிப்பதற்குள் பூவரசன் தீபிகாவை திருமணம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் தீபிகாவுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இரண்டு பெண்களையும் ஒரே மாதத்தில் ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட பூவரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

20 minutes ago

அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…

43 minutes ago

கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…

2 hours ago

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…

10 hours ago

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago