17வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடிக்கு அருகேயுள்ள சிரிக்கோட்டையை சேர்ந்தவர் 27வயதான பழனிசாமி. இவர் தனது உறவினர் மகளான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் சிறுமி காணாமல் போயுள்ளார்.
உடனடியாக அவரது பெற்றோர்கள் காரைக்குடியில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசாரும் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். அதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை கடத்தி சென்றவர் பழனிச்சாமி என்று தெரிய வந்ததை அடுத்து, காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…