ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பிய கௌதமி ஏமாற்றமடைந்த நிலையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் தான் போட்டியிட விரும்பிய ராஜாப்பாளையம் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வந்த நிலையில், இந்த தொகுதியில் கௌதமி தனது தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
ஆனால் ராஜபாளையம் தொகுதி அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் கௌதமி ஏமாற்றம் அடைந்த கௌதமி, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக, உங்களில் ஒருவராக, கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்தீர்கள். நீங்கள் எனக்கு காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டுபட்டிருக்கிறேன். உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ, அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.’ என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…