இதையும் அண்ணாமலை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? என அனைத்து மாநிலங்களும்  விமர்சனம் செய்து வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையில் 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறப்பட்டிருந்தது. சொன்னபடி அதை நிறைவேற்றவில்லை என்றால் கோட்டையை விட்டு விடுவோம் என்று கூறியிருந்தது  தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர்,  பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? என அனைத்து மாநிலங்களும்  விமர்சனம் செய்து வருகிறது. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்