அரையிறுதிக்குள் தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக இந்திய மகளிர் அணி,மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
நாளை மறுநாள் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை அரை இறுதியில், இந்திய மகளிர் அணி எத்ரிகொள்கிறது. அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளீர்கள் என்றும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வெற்றி பெற்று தங்கம் வெல்ல வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…