கோவை மாவட்டம் கிராம சபை கூட்டத்தில் அதிமுக அமைச்சர் வேலுமணியை கடுமையாக எச்சரித்த திமுக தலைவர் முக ஸ்டாலின்.
கோவை, தேவராயபுரம் கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அதில், பெண் ஒருவர் பேச முன்வந்தபோது, நீங்கள் எந்த ஊர் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா? என ஸ்டாலினிடம் பதில் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஆத்திரமடைந்த ஸ்டாலின், அந்த பெண்ணிடம், நீங்கள் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள், தேவையில்லாத கேள்விகளை கேட்கின்றீர்கள், வெளியேறுங்கள் என்று கூறியதுடன் என் கிட்ட கொடுத்த பட்டியலில் உங்க பெயர் இல்லை? என கூறியுள்ளார். காவல்துறை அந்த பெண்ணை இழுத்து சென்றது கோபமடைந்த பெண் திமுக ஒழிக என்று கோஷமிட்ட வெளியேறினார்.
இதையடுத்து பேசிய ஸ்டாலின், சகோதிரி ஒருவர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர். எனக்கு நேற்றைக்கே தெரியும் இந்த கூட்டத்தை எப்படியாவது கெடுக்கணும், அப்படி என்று வேலுமணி திட்டமிட்டு, இந்த காரியத்தை செய்துள்ளார். நீ ஒரு கூட்டத்தை தடுக்க முயற்சி செய்யலாம். நீங்க நடத்துற எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம். இது கட்டுப்பாடு உள்ள இயக்கம். அதனால் சரியாக கண்டறிந்து அவரை வெளியே அனுப்பிவிட்டோம், இதுதான் திமுக.
இந்த கூட்டத்தில் புகுந்து அதுவும் திமுக தொப்பியை வாங்கி போட்டுகொண்டு வந்துள்ளார். தைரியம் இருந்தால் அதிமுக என்று சொல்லிருக்க வேண்டும். மிஸ்டர் வேலுமணி, அமைச்சர் வேலுமணி, ஊழல் வேலுமணி அவர்களே இன்றுடன் உங்கள் கொட்டத்தை அடக்குங்கள். இதுபோன்று தொடர்ந்தால், நீ இல்ல, உங்க முதலமைச்சர் எங்கேயும் கூட்டம் பேச முடியாது. நாங்க இறங்குனா என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் அதான் மரியாதை, அவ்வளவு தான் சொல்ல முடியும் என்று கடுமையாக பேசியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…