திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் அமையவுள்ள ரூ.385.63கோடியில் மதிப்பிலான புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திருப்பூரில் 336.98 கோடி மதிப்பிலான அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையயடுத்து இன்று திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் அமையவுள்ள ரூ.385.63கோடியில் மதிப்பிலான புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதனிடையே கடந்த 2019ல் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லுரிக்கும் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…