நேற்று திருப்பூர், இன்று திருவள்ளூர்.! 11வது கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் அமையவுள்ள ரூ.385.63கோடியில் மதிப்பிலான புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

மத்திய அரசு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

இந்நிலையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திருப்பூரில் 336.98 கோடி மதிப்பிலான அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையயடுத்து இன்று திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் அமையவுள்ள ரூ.385.63கோடியில் மதிப்பிலான புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதனிடையே கடந்த 2019ல் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லுரிக்கும் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago