கன்னியாகுமரி மாவட்டத்தில் தவறான சிகிச்சையின் பெயரில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். சிகிச்சை அளித்த ஹோமியோபதி மருத்துவர் தலைமறைவானார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு எனும் பகுதியை சேர்ந்த அபினேஷ் என்கிற சிறுவன் சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
காய்ச்சல் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுவன் நேற்று திடீரென உயிரிழந்தான். இதனால், சிறுவனின் உயிரிழப்புக்கு தவறான மருத்துவ சிகிச்சையே காரணம் எனவும், ஆதலால், மருத்துவரை கைது செய்து, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையை சீல் வைக்கவேண்டும் என அச்சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த போலீசார் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், சிகிச்சை அளித்த முறுத்துவர் ஹோமியோபதி மருத்துவர் எனவும், அவரும் மனைவியும் சேர்ந்துதான் சிகிச்சை அளித்தார்கள் எனவும் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து, அந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. மேலும், தலைமறைவான மருத்துவரை விரைவில் கைது செய்வோம் என அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…