கோயம்புத்தூரில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்தால் கோவை காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கோயம்புத்தூர் காளப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, ஹெல்மெட் அணியாத காரணத்தால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், அவரிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் போன்றவை சரியாக இருந்தலும் அவர் ஹெல்மெட் போடவில்லை என்பதால் 100 ரூபாய் அபராதம் விதித்தனர். அந்த ரசீதில் தான் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கு பதிலாக, சீட் பெல்ட் அணியவில்லை என தவறாக எழுதப்பட்டு இருந்தது. அதை அதிகாரிகள் கவனிக்காமல் கையொப்பமிட்டு கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டார். இதனை கண்ட கார்த்திக், அந்த ரசீதை போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த ரசீது இணையதளவாசிகள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…