ராமர் கோயில் திறப்பு விழாவின் கடைசி நேரம்.. உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு!

Published by
பாலா கலியமூர்த்தி

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் இன்று நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழக கோயில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுப்பதாக புகார் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவும், காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் அயோத்தியில் குவிந்துள்ளனர். அதன்படி, ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் இன்று சுமார் பகல் 12.20 மணிக்கு நடைபெற உள்ளது.

அப்போது, ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. முக்கிய பிரமுகர்கள் வருகையால் அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழல், இன்று ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ள நேரத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகள் செய்யப்படுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது.

ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி பற்றிய முழு விவரம்..!

இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஆனால், சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் நிகழ்ச்சி உட்பட பல இடங்களில் எல்இடி திரை மூலமாக ராமர் கோயில் திறப்பு விழாவை அயோத்தியில் இருந்து நேரடியாக ஒளிபரப்ப மறுப்பதாக குற்றசாட்டை முன்வைத்து பாஜக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வலம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றுக்கு அனுமதிக்கக்கூடாது என்று காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனவே, இதனை, ரத்த செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் ரிட் மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.  சென்னையை சேர்ந்த வினோஜ் பன்னீர்செல்வம் என்பவர் பாஜக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Recent Posts

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

25 minutes ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

3 hours ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

4 hours ago

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

5 hours ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

5 hours ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

6 hours ago