நாளை மறுநாள் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழிபட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க இன்று உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை விரைவில் தமிழக அரசு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 26ம் தேதி முதல் கொரோனாவுக்கான பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி கிடையாது.
இதில் குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழிபட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிரதார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டு தல ஊழியர்கள் மூலம் நடத்திவதற்கு தடையில்லை. இந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…