கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டி உலக சாதனை பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்கு 98 ஆவது பிறந்த நாள். இந்த 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் ஓவிய போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்றுள்ளது. இதில், இந்தியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் 98 மாணவர்கள் தரையில் கலைஞரின் ஓவியத்தை வரைந்தனர்.
கொரோனா காலத்தில் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஓவிய போட்டி நடத்தியுள்ளனர். இதில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் உட்பட மொத்தம் 98 மாணவர்கள் 98 இடங்களில் 98 நிமிடத்தில் கலைஞரின் ஓவியத்தை தரையில் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஓவியத்தை வரைந்த 98 மாணவர்களின் பெயர்களும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…