மூன்று லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதத்தை 12 லிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.
கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை கொள்ளை விளக்க குறிப்பை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருக்கும் பெண்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்க்கப்படுவர் என்று அறிவித்தார்.
மகளிர் சுய உதவி குழுக்களில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதம் 12%ல் இருந்து 3%ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைப்பின் மூலம் 3,63,881 குழுக்களை சேர்ந்த 43,39,780 உறுப்பினர்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிட்டார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படும். கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்கப்படும்.
மேலும், கூட்டுறவுத்துறை தொழில்பயிற்சி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 % வட்டியில் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கூட்டுறவு துறையில் 3939 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் விரைவில் நிரப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…