மகளிரணி தலைவியின் காலை வாரிய மாட்டு வண்டி..!-பதற்றத்தில் தலைவி..!

Published by
Sharmi

பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் மகளிரணி தலைவி மாட்டு வண்டியில் ஏறமுற்பட்டபோது மாடுகள் வண்டியை பின்பக்கம் தள்ளியதால் தலைவி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி தலைவி அமுதாவுடன் திரளாக சேர்ந்த மகளிர் கூட்டம் சாலையில் வைத்திருந்த சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மகளிரணி தலைவியை மாட்டுவண்டியின் மீது ஏறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதனால் அங்கு ஒரு மாட்டு வண்டி கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இதில் ஏறுவதற்காக பிளாஸ்டிக் நாற்காலியை பயன்படுத்தியுள்ளார் மகளிரணி தலைவி. இந்நிலையில், மாட்டு வண்டியில் இருக்கும் மாடுகள் இரண்டும் திடீரென்று பின்பக்கம் நகர்ந்ததால், பின்பக்கம் ஏறுவதற்காக நாற்காலியில் நின்றுகொண்டிருந்த தலைவி அமுதா கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தலைவியின் உடனிருந்தவர்கள் கீழே விழாமல் தடுத்து தாங்கி பிடித்துள்ளனர். இதன் பிறகு தலைவி ஒருவித பதற்ற நிலையை அடைந்துள்ளார். அதனால் மீண்டும் மாட்டு வண்டியில் ஏறுவதை தவிர்த்துள்ளார். பின்னர் மாட்டு வண்டி வண்டிக்காரரால் அழைத்து செல்லப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் இது மக்களிடையே பரவி வருகிறது.

Published by
Sharmi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago