தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தில் நட்பாக பழகிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களால் மனமுடைந்த சிறுமியை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தான் 17 வயது சிறுமி. இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வேலைக்காக மகளிர் சுய உதவி குழுவில் வேலை பார்த்து வந்துள்ளார். லோன் வழங்குவது தொடர்பாக பிறரிடம் இறங்கி பழகி பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் சிறுமிக்கு சரவணன், வேல்சாமி, குகன் ஆகிய மூவர் நண்பர்களாக அறிமுகமாகி உள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் நட்பாக பழகி இருந்தாலும், சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கியதால், இதை அறிந்த சிறுமியின் தாயார் பயந்து அவர்களிடம் இருந்து விலகுமாறு கூறியுள்ளார். தாயின் சொல் கேட்ட சிறுமி அவர்களிடம் பேசுவதை குறைத்து அவரிடம் இருந்து விலகியுள்ளார்.
இதை அறிந்த அந்த இளைஞர்கள் சிறுமிக்கு அடிக்கடி செல்போன் மூலம் அழைப்பு விடுத்து, தங்களது ஆசைக்கு இணங்குமாறும் தனியான ஒரு இடத்துக்கு வருமாறு கூறியுள்ளனர். இதனால் ஏற்கனவே மனம் உடைந்து போயிருந்த சிறுமியை, கடந்த எட்டாம் தேதியன்று அவரது வீட்டிற்கு நேரடியாகவே சென்ற சரவணன் என்ற இளைஞரை வெளியில் ஊர் மக்கள் கேட்கும்படி சத்தமாக வெளியில் வரும் படியாகவும், வராவிட்டால் தான் அச்சிறுமியை தீ வைத்து கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி உள்ளே சென்று தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக தூத்துக்குடி குளத்தூர் காவல் நிலைய போலீசார் சரவணன் மற்றும் அந்த மூன்று இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இதில் ஒரு இளைஞர் மட்டும் சிக்கி உள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. நட்பாக பழகிய பெண்ணிடமே பாலியல் தொந்தரவு கொடுத்த இந்த இளைஞர்களால் தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…