மயக்க மருந்து கொடுத்து பெண் காவல்துறை அதிகாரியை கற்பழித்த சாமியார்!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

மதுரையில் உள்ள தல்லாக்குளம் பகுதியில் பெண் காவல் துறை அதிகாரியாக பணிபுரிபவர் எஸ்.சந்தானலட்சுமி.இவரது சொந்த ஊர் மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம். கடந்த 2007 -ம் ஆண்டு இவருக்கும் சீனிவாச பெருமாள் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது 29 வயதான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி இவருக்கு சாதி சங்க தலைவரான பூமிநாதன் மற்றும் தல்லாக்குளம் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் என்ற இருவர் அறிமுகமாகியுள்ளன.

மேலும் ஜூலை 6-ம் தேதி மதியம் 12 மணியளவில் பூமிநாதன்,கணவருக்கு வசிய மருந்து வைத்து சேர்த்து வைப்பதாக சாமியார் என்ற ஒருவரை அறிமுப்படுத்தியுள்ளார்.அதற்காக கணவரின் சட்டை மற்றும் 50,00 பணம் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.

அவர்கள் கூறியமாதிரி பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.அப்போது பூஜைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி கீழமாசி வீதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சாமியாருக்கு அருள்வர கேரளாவிற்கு இன்று செல்லவேண்டாம் என கூறியுள்ளார்.அதனால் மீண்டும் அவர்கள் இருந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.மேலும் காந்தி  மியூஸியம் அருகில் வந்த போது ஏதோ தடங்கலாக உள்ளது என்று கூறி சாமியார் சந்தானலட்சுமியின் மீது ஒரு மையை தடவியுள்ளார்.

அப்போது சந்தானலட்சுமி மயக்கம் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.பின்னர் 10.30 மணியளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது.அப்போது அவர் எழுந்து பார்க்கும் போது தனது ஆடை கலைந்திருந்த நிலையில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதை உணர்ந்துள்ளார்.

இதன் பின்னர் வீட்டிற்கு வந்த போது போமிநாதனின் தந்தை என கூறி பேசிய நபர்,அங்கு நடந்ததை வெளியே கூறினால் வாழ்க்கையை சீரழித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதன் காரணமாக மதுரை காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து சந்தானலட்சுமி மருத்துவ பரிசோதனைக்காக மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பின்னர் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சாமியார் உட்பட 4 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Recent Posts

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

38 minutes ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

1 hour ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

1 hour ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

2 hours ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

4 hours ago