உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த இந்த குழந்தை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2ம் தேதி உயிரிழந்தாக கூறி, வீட்டின் முன்பு பெற்றோர் புதைத்துள்ளனர். இதுகுறித்து சந்தேகமுற்ற கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து பெற்றோர் வைரமுருகன், சௌமியா, வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிறந்து 31 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை, பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து புதைத்துள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்த கொலை செய்த சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…